tamilnadu

img

சுதந்திரத்தின் கனவுகளும் நிஜங்களும் -எஸ்.ஏ.மாணிக்கம்

நூற்றாண்டுகாலப்  போராட்டத்தின் விளைவாக பெறப்பட்ட தேச விடுதலை இன்று 73ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் ‘விடுதலை’ ஒன்றே மைய நோக்கமாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் கோடிக்கணக்கான  மக்களின் எதிர்கால வாழ்க்கையின் மீதான மெய்யான நம்பிக்கைகள் ஒருபுறமும்,  பல்வேறுபட்ட கொள்கைக ளைக் கொண்ட தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மறுபுறமும் என முரண்பட்ட கனவுகளுடன் புதிய இந்தியா பிறந்தது. 

தடம் புரண்ட கனவுகள் கல்வி, வேலை

1941ஆம் ஆண்டில் கல்வியறிவு பெற்றோர் ஆண்கள் 24.9 சதவிகிதமும், பெண்கள் 7.3 சதவிகிதமும் என மொத்தமாக 16.1 சதவீதமாக இருந்தனர். 1961இல் ஆண்கள் 40.4 சதவிகிதமாகவும், பெண்கள் 15.35 சத விகிதமாகவும் என மொத்தமாக 28.3 சதவிகிதமாகவும் உயர்ந்தது. இது 1971இல் முறையே 45.06 மற்றும் 21.97  என்ற மொத்தம் 34.45 சதவிகிதமாக மாறியது.   முப்பதாண்டு கால சுதந்திரத்தில் 65 சதவீதத்திற்கு கூடுதலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாகவே இருந்துள்ளனர். 1956-57ஆம் ஆண்டில் வறுமையால் வாடுவோர் இந்தியர் எண்ணிக்கை 65 சதவீதமாக இருந்தது. (21.5 கோடி) இது 1960இல் 59 சதவீதமாக இருந்தது. 1951 முதல் 1974 வரையிலான காலத்தில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை 47 முதல் 56 சதவிகிதமாக இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப வறுமையும் ஒழிக்கப் படவில்லை. நேரு ஆட்சிக்காலத்தில் முதன்மையான தொழில்க ளில் பொதுத்துறை நிறுவனங்கள் துவக்கப்பட்டும், அடிப்படை கட்டமைப்புக்களை மேம்படுத்தியும் தொழி லாளர்கள் எண்ணிக்கையில் பெரியளவு வளர்ச்சி இல்லை. 1956இல் வேலையற்றோர் எண்ணிக்கை 50 லட்சமாக இருந்தது. 1972இல் 1 கோடியாக உயர்ந்தது. ஏழைகளின் சுதந்திர இந்திய கனவு நேருவின் ஆட்சிக்காலத்தில் நிறைவேறவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை

தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கல்வியறிவு பெற்றோர் 1961இல் 10.28 சதவிகிதமாகவும், 1971இல் 14.67 சதவிகித மாகவும், 1981இல் 21.38 சதவிகிதமாகவும் இருந்தது.  சுதந்திரத்திற்கு பிறகான 33 ஆண்டுகளில் சரிபகுதியான தாழ்த்தப்பட்ட மக்களைக்கூட எழுத்தறிவு பெற்றவர்க ளாக உயர்த்த முடியவில்லை. வேலைவாய்ப்பிலும் பெரியளவிற்கு மாறுதல்கள் இல்லை. மத்திய அரசின், செயலாளர்கள், துணை இயக்குநர்கள் போன்ற முக்கிய பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவு. 1965ஆம் ஆண்டு முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு அதிகாரிகளாக 1.64 மற்றும் 2.82 என்ற சதவிகிதத்தில் இருந்தனர். 1981இல் இதன் விகிதம் 6.71 மற்றும் 10.16 என்ற அளவில் இருந்தது. பெரும்பா லும் மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவு ஊழியர்க ளாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். விவசாயத் துறையிலும் 70 சதவிகிதத்தினர் விவசாயக் கூலிகளாகவும், விவசாயம் சார்ந்த பணிகளில் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். மொத்த நிலச்சாகுபடியில் 10.27 சதவிகிதத்தினரே தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இதுதவிர தற்போது சமூக ஒடுக்குமுறை தளத்திலும் இவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வரு கிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் மறுக்கப்படுவதும், சாதியின் பெயரால் தாக்கப்படுவதும், பெண்கள் சாதிய ஆதிக்க சக்திகளால் சீரழிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இந்திய முதலாளிகளின் வளர்ச்சி

ஆங்கிலேயே முதலாளிகளின் தொழிற்சாலை களுக்கு மூலப்பெருட்களை கைமாற்றி கொடுத்து வாணி பம் செய்து வந்த இந்திய முதலாளிகள், படிப்படியாக அவர்களின் ஆதரவோடு தொழிற்கூடங்களை அமைத்து, சரக்கு உற்பத்தியிலும் ஈடுபட்டு தொழிற்துறை முதலாளிக ளாக வளர்ந்தனர். ஹிட்லரை தோற்கடித்த சோவியத் நாட்டின் வெற்றியால் இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்த தருணத்தில், போராட்ட அலைகள் எழுச்சி கண்ட வேளையில் ஆங்கில அரசு இந்தியாவில் நீடித்திருப்ப தற்கான வழியில்லை என்று உணர்ந்து கொண்ட இந்திய முதலாளிகள், விடுதலை பெற்ற புதிய இந்திய அரசு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய அணுகு முறை பற்றி உருவாக்கிய ஆவணமே பம்பாய் திட்டம் ஆகும். இதன் அடிப்படையிலேயே நேருவின் அரசு தேசிய வருமானத்தினை பகிர்ந்தளித்தது. 1947க்கு பிறகு முதல் மூன்று ஐந்தாண்டு கால திட்டங்களின் முடிவில் விவசாயத்திற்கான முதலீடு  130சதவிகித உயர்வாகவும், தொழிற்துறையின் முதலீடு 500 சதவிகிதமும், சேவைத்துறையில் 200 சதவீதமாகவும் இருந்தது. நாட்டின் வேளாண்துறைக்கான முதலீடு குறைக்கப்பட்டு வந்தது. அதேபோல முதலாளித்துவ வளர்ச்சிக்கு உறுதுணையாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் பொதுத்துறை வாயிலாக திருப்பி விடப்பட்டது. 

இரும்பு உருக்கு, நிலக்கரி, மின்சாரம், போக்குவரத்து ஆகிய பெரும் முதலீட்டு திட்டங்கள் யாவும் பொதுத்துறை கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் பொருள் தொழிற்துறைக்கு தேவையான இந்த மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலத்திற்கு லாபத்தை எதிர்பார்க்க முடியாத நிலையில், இவைகளை அரசின் முதலீட்டுடன் மேற்கொள்வதற்கு முதலாளிகள் நிர்பந் தித்தனர். இதற்காகவே வெளிநாட்டு கடன்களை பெற்று பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் செய்யப் பட்டன. இவ்வாறு 1960-1975 வரையிலான காலத்தில் சரா சரியாக ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 4.4 சத விகிதத்திற்கு கடன் பெற்றது. இது 1980-81இல் 6 சதவீத மாகவும், 1989-90இல் 9 சதவிகிதமாகவும் இருந்தது. மறுபுறம் இப்பொதுத்துறை நிறுவனங்கள் லாப மீட்டத் துவங்கி முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எதிராக வளர்க்கவும், மத்திய அரசு அந்நிறுவன பங்குகளை விற்று, அவற்றை திட்டமிட்டு நலிவடையச் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 1951ஆம் ஆண்டில் மொத்த தேசிய முதலீட்டில் 20 சதவிகிதம் வெறும் 20 குடும்பங்களிடம் இருந்தது. இது  1958இல் 33 சதவிகிதமாக உயர்ந்தது. 1965ஆம் ஆண்டில் 75 ஏகபோக பணக்காரக் குடும்பங்களிடம் 47 சதவிகித மான அரசு சாரா நிறுவனங்களின் சொத்துகள் இருந்தன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது, உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 7 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளதன் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரத்தின் பலனை இவர்களே அனுபவித்து வரு கின்றனர்.

மக்கள் ஒருமைப்பாடு

1857 முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு  பிரிட்டீஷ் அரசு இந்தியாவில் கடும் எதிர்ப்பினை சமாளிக்க வேண்டியி ருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளமாக இருந்த இந்து- முஸ்லிம் ஒற்றுமையினை சீர்குலைப்பதன் மூலமே தாங்கள் நீடித்தாள முடியும் என்று நம்பியது. இதற்கா கவே இந்து - முஸ்லிம் மக்களிடையே பகைமைத் தீயை வளர்த்தது. சந்தர்ப்பத்திற்கேற்ப இந்து மகாசபையை யும் முஸ்லிம் லீக்கையும் அது பயன்படுத்திக் கொண்டது. இந்துக்களின் பிரதிநிதியாக தங்களைத் தாங்களே முன்மொழிந்து கொண்ட இந்து மகாசபை, முஸ்லிம்க ளின்  தனிநாடு கோரிக்கையை ஆதரித்ததோடு இந்துக்க ளின் நாடாக இந்துஸ்தானம் இருக்க வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் உரிமை கோரியது.  விடுதலையின் போது   மக்கள் ஒற்று மைக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் வலுவாகக் குரல் கொடுத்து வந்த காந்தியும், நேருவும் இந்து மகா சபையின் கோரிக்கையை புறக்கணித்தனர். அனைவ ருக்குமான இந்தியா என்ற முழக்கத்தை முன்னிறுத்தி சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புக்கும் வடிவமைக் கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த காங்கிரஸ் அரசின் நீண்ட கால முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் நிலப்பிரபுக்க ளுடனான நேசமான அணுகுமுறையும் கொண்ட கொள்கைகளின் விளைவாக வளர்ச்சித் திட்டங்களின் பலன் யாவும் இவ்விரு வர்க்கத்திடம் போய்ச் சேர்ந்தது. கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கை தரம் பின்னோக்கிச் சென்றது. கடன் சுமையால் தேசம் திணறி யது. 1990களில் துவக்கப்பட்ட தாராளமயக் கொள்கைகள் நாட்டின் நெருக்கடியை மேலும் ஆழமாக்கியது.

நெருக்கடியிலிருந்து மக்களை திசை திருப்ப வகுப்பு வாதத்தை ஆளும் வர்க்கம் ஆதரித்ததன் மூலமாக ஆர்எஸ்எஸ்சும், பாஜகவும் வளர்ந்தன. காங்கிரஸ் கட்சி க்கு மாற்றாக இடதுசாரி மதச்சார்பற்ற சக்திகள் எழாத வண்ணம் வகுப்புவாத அரசியல் முன்னிறுத்தப்பட்டது. இதன் விளைவாக 1984இல் 2 நாடாளுமன்ற உறுப்பி னர்களைக் கொண்டிருந்த பாஜக, வெறுப்பு அரசியலை மையப்படுத்தி மத ரீதியில் மக்களை திரட்டிடும் தந்தி ரத்தில் வெற்றி கண்டது. தற்போது கிடைத்துள்ள அசுர பலத்தைக் கொண்டு ஒரே இந்துஸ்தானம், ஒரே மொழி,  ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கோல்வால்கரின் கொள்கைகளை ஒவ்வொன்றாக அமலாக்கிட முனைகிறது.

இந்தியாவில் சோசலிசம் 

மாபெரும் ரஷ்யப் புரட்சியின் சோசலிச தாக்கம் இந்தியாவிலும் உருவானது. 1920இல் இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கம் தாஷ்கண்ட் நகரில் துவக்கப்பட்டது. இந்தியாவிற்கு பரிபூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை முதன் முதலில் காங்கிரஸ் மேடைகளில் முன்வைத்தது கம்யூனிஸ்ட் இயக்கம் தான். அரசியல் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, ஆங்கிலேய மற்றும் இந்திய முதலாளிகள், நிலச்சுவான்தார் களின் சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற வர்க்கப் போராட்டத்தோடு விவசா யிகளையும், இளைஞர்களையும் இணைத்து தேச விடு தலைப் போராட்டத்தில் களம் கண்டது. இந்திய இடதுசாரி களின்  விடுதலைப் போராட்ட முகமாக மாவீரன் பகத் சிங்கை குறிப்பிடலாம்.  மாபெரும் தெலுங்கானா விவ சாயிகள் போராட்டமும், மலபார் விவசாயிகள் போ ராட்டமும், தேபகா போராட்டமும், இறுதியாக இந்திய மாலுமிகளின் பம்பாய் கப்பற்படை எழுச்சியில் மூவர்ணக்கொடி, முஸ்லிம் லீக் கொடியோடு செங்கொடியையும் ஏற்றியதும் இந்திய உழைப்பாளி மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கினை புரிந்து கொள்ள முடியும். சுதந்திரத்திற்குப் பிறகு உருவாகும் ஆட்சியின் தலைமையே தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்பதற்கு, சீன நாட்டின் ஒப்பீடே பொருத்தமாக இருக்கும்.  இந்திய விடுதலைக்கு பிறகு 1949இல் ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து விடுதலையான சீன மக்கள் குடியரசு, இரண்டே ஆண்டுகளில் நில விநியோகத்தை முழு மையாக நிறைவேற்றியது. விவசாய கூட்டுப் பண்ணை முறையினையும் அமலாக்கியது. நாட்டின் மிகப்பெரும் தொழிற்துறைகள் அரசுடமையாக்கப்பட்டன.  கல்வி, மருத்துவம்,. வேலைவாய்ப்பு அனைவருக்குமான கொள்கையாக அறிவிக்கப்பட்டது. தன்னுடைய வளர்ச்சி யின் அடித்தளமாக சோசலிசத்தை  கொண்டுள்ள சீன நாடு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறிவருவதை குறிப்பிட வேண்டியுள்ளது. 

சோவியத் நாட்டின் பின்னடைவால் உலக முதலா ளித்துவத்தின் கை ஓங்கியதும், நிதி மூலதனத்தின் பாய்ச்சல் வேகம் உலகம் முழுவதும் விரிவடைந்ததைக் காண்கிறோம். சர்வதேச மூலதனத்திற்கு குறுக்கே நிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை, குறிப்பாக இடது சாரி இயக்கங்களை பலவீனப்படுத்துவதை தங்களின் அரசியல் நோக்கமாகவே அவை கொண்டிருக்கின்றன. இதற்காக தேசத்திற்கு ஏற்றவாறு வலதுசாரி சக்திகளை மற்றும் இடதுசாரி எதிர்ப்பாளர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியாவில் இதன் முதல் தாக்குதல் இந்திய இடதுசாரி இயக்கத்தின் மணி மகுடமான மேற்கு வங்க அரசையும், அடுத்து திரிபுரா அரசையும் கவிழ்த்ததாகும். இதற்கேற்ப  இடது சாரிகளின் கருத்தாக்கத்தை புறக்கணிப்பதும்,  மக்கள் இயக்கங்களை  கண்டும் காணாத போக்குடன் இருப்ப தற்காக இந்திய பெருநிறுவனங்களின் ஊடகங்களை பயன்படுத்திக் கொள்கின்றன.  72 ஆண்டுகால சுதந்திரம் இன்று ஏகாதிபத்திய, இந்திய பெரும் முதலாளித்துவ, வகுப்புவாத சக்திகளின் நலன்க ளுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் குண்டாந்தடிகளுக்கும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும், இரையான இந்திய வெகு மக்களின் வாரிசுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. சுரண்டலற்ற இந்திய சமூகத்திற்கான பகத்சிங்கின் கனவுகளை நன வாக்க, சுதந்திரப் போராட்ட மாண்புகளை வலுவாக முன்னெடுத்துச் செல்வது அவசியம்.

 

சுதந்திரத்தை சிறை வைத்த எதேச்சதிகாரம்

நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றும்போது, காஷ்மீரில் பல லட்சக்கணக்கான மக்கள் பதினோராவது நாளாக தங்கள் சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இயக்கம் நடத்துவதற்கான உரிமை, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை, தங்கள் ஜீவனத்திற்காக வேலை செய்யும் உரிமை, பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் உரிமை, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கான உரிமை மற்றும் மருந்துகள் வாங்குவதற்கான உரிமை என அனைத்து உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.  அதாவது சுதந்திர இந்தியாவில் அடிப்படை உரிமைகளுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.

காஷ்மீரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டோ அல்லது சட்டவிரோதமாகத் தடுத்து மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டோ உள்ளனர். பலர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்ரா, பரோலி அல்லது லக்னோ போன்ற இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எவரும் அவர்களைப் பார்க்க முடியாது.

காஷ்மீர் மக்களின் அரசியல்ரீதியான வாக்குரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில்  அவர்கள் இழிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய சட்டமன்றம் புதுச்சேரி மாடலில் லெப்டினன்ட் கவர்னரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் சட்டமன்றம் போன்று அமைந்திடும். சட்டமன்றத்தின்  உறுப்பினர் தேர்வும் மாற்றப்பட இருக்கிறது. அதாவது காஷ்மீர் பகுதிகளில் இடங்களைக் குறைத்து, ஜம்மு பகுதியில் அதிகரித்திட முடிவு செய்திருக்கிறார்கள்.

முந்தைய சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 83ஆக இருந்தது. இதனை 90ஆக அதிகரித்திருக்க வேண்டும். இப்போது மாற்றியமைக்கப்படக்கூடிய சட்டமன்றத் தொகுதிகளின்படி ஜம்மு பகுதியில் இடங்கள் அதிகரிக்கப்பட இருக்கிறது. இது முந்தைய சட்டமன்றத்தில் 37ஆக இருந்தது. தலித், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதுடன் பார்க்கையில் காஷ்மீரில் முஸ்லிம்களுக்கான இடங்கள் மேலும் குறையும். எப்படியும் பாஜக அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடிய விதத்தில் தொகுதிகள் மாற்றப்பட இருக்கின்றன. இதுதவிர லெப்டினன்ட் கவர்னர் இரண்டு பெண் உறுப்பினர்களை நியமிப்பார்.
 

மேலும் ஒரு ஆபத்தான நடவடிக்கை என்பது மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே மாற்றத்தைக் கொண்டுவர இருப்பதாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடு என்ற பெயரில், ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே இருக்கின்றவர்களை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் நிலம் வாங்கி குடியேறுவதற்கு ஊக்குவிக்கப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் பிடிபி-பாஜக கூட்டணி அரசாங்கம் இருந்த சமயத்தில், முன்னாள் ராணுவத்தினரை வீட்டு வசதிக் குடியிருப்புகளில் குடியேற்றுவதற்கான ஒரு முன்மொழிவு இருந்தது. இதன் நோக்கமும், காஷ்மீர் மக்களின் அடையாளத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதும், இப்போதுள்ள நிலைமையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதுமேயாகும்.

எதேச்சதிகார ஆட்சி என்பது தங்களை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் விட்டுவைக்காது. எதிர்க்கட்சித் தரப்பில் இருப்பவர்கள் மற்றும் தங்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலிப்பவர்கள் எவராக இருந்தாலும் விட்டுவைக்காது. சுதந்திரத்தாலும் நம் நாடு குடியரசாக மாறியதாலும் மக்களுக்குக் கிடைத்த சுதந்திர உரிமைகள் அனைத்தும் தற்போது ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. மோடி-அமித்ஷா இரட்டையரால் காஷ்மீர் மக்கள்மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அட்டூழியங்கள் மூலம் மக்களுக்கு விடுத்துள்ள செய்தி இதுவேயாகும்.

இத்தகைய பின்னணியில்தான், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதுடன் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும், மக்களைப் பெரும் திரளாக அணிதிரட்டியும், ஒன்றுபட்ட மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பியும் மேலும் மேலும்  உக்கிரமாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதன் மூலம் இத்தகைய மிகவும் முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆகஸ்ட் 15 அன்று உறுதி ஏற்போம். 

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கத்தின் பகுதிகள்
ஆகஸ்ட், 14,2019 
தமிழில்: ச.வீரமணி